நான் தமிழ் வெறியன் அல்ல: இளங்கோவன்
தர்மபுரி:
தமிழ் மீது எனக்குப் பற்று உண்டு, ஆனால் வெறி கிடையாது என்று மத்திய வர்த்தக இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
விழாவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பெரியாரின் பேரன், சம்பத்தின் மகன் என்பதில் எனக்குஎப்போதும் பெருமை உண்டு. நான் எந்த இடத்திலும் தமிழைப் படிக்கக் கூடாது என்றோ, தமிழுக்கு எதிராகவோ கருத்துகூறியதில்லை. எனக்கு தமிழ் மீது பற்று உண்டு, ஆனால் வெறி கிடையாது.
தமிழுக்கு செய்யும் உண்மையான தொண்டு என்பது, திமுக தலைவர் கருணாநிதி செய்வது போல பாமரரும் புரிந்து கொள்ளும்வகையில் திருக்குறளுக்கு எளிய நடையில் உரை எழுதுவது, மற்ற தமிழ் இலக்கியங்களையும் மக்கள் புரிந்து கொள்ளும்வகையில் விளக்க உரை எழுதுவது என்பதாகும்.
தமிழ் மொழி பற்றி எழுந்த விவாதம் ஒரு பிரச்சினையே அல்ல. திருமாவளவன் இதை ஒரு பிரச்சினையாக்கி, திமுக தலைவர்கருணாநிதி தான் இதற்குக் காரணம் என்று கூறியிருக்கிறார். இது மிகவும் வருந்துவதற்குரியதாகும்.
திருமாவளவன் என்ன தான் முயன்றாலும் எங்களது கூட்டணியை அவரால் உடைக்க முடியாது. சிறு விரிசல் கூட வராதுஎன்பதை உறுதியாகசொல்லிக் கொள்கிறேன்.
தமிழ் பாதுகாப்பு இயக்கம் குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. நான் ஆங்கிலத்தின் அவசியம் குறித்து பேசுகிறேனே தவிரதமிழ் மொழி தேவையில்லை என்று பேசவில்லை.
டாக்டர் ராமதாஸ் என்னைப் பற்றி சில தனிப்பட்ட விமர்சனங்களை செய்திருக்கிறார். அவர் மூத்த அரசியல்வாதி, அனுபவசாலி.எனவே அவருடைய விமர்சனங்களை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
தமிழ் மட்டுமல்லாமல் கூடுதலாக அதிக மொழிகளைக் கற்றால் நமது இளைஞர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார் இளங்கோவன்.
ஆதரவாளர்களுடன் ஆலோசனை:
இந் நிலையில் இளங்கோவனை கடுமையாக பழித்தும், விமர்சித்தும், ஆபாச வார்த்தைகள் அடங்கிய போஸ்டர்கள் சென்னைநகரின் பல பகுதிகளில் இன்றும் ஒட்டப்பட்டன.
இளங்கோவனுக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர்கள் யாரும் கருத்து தெரிவிக்காமல் உள்ளனர். இதனால் இளங்கோவன்ஆதரவாளர்கள் கொதிப்படைந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யவும், இளங்கோவன் எதிர்ப்பாளர்களுக்கு பதிலடிகொடுப்பது எப்படி என்பது குறித்து முடிவு செய்யவும் அவர்கள் இன்று சென்னையில் கூடி ஆலோசித்தனர்.
தமிழக வர்த்தக காங்கிரஸ் தலைவர் வசந்த குமார் தலைமையில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இந்தஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications