சுதந்திர போராட்ட வீராங்கனைக்கு நிதியுதவி, வீடு: ஜெ உத்தரவு
சென்னை:
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தில் இடம் பெற்றிருந்த சரஸ்வதி என்ற ராஜாமணி அம்மாளுக்கு ரூ. 5லட்சம் நிதியுதவியும், இலவச வீட்டையும் வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தங்குவதற்கு இட வசதி இல்லாமல் சிரமப்படுவதாகவும், தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்றும் கோரி முதல்வர்ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அவரது கடிதத்தை பரிவுடன் பரிசீலித்த முதல்வர் ஜெயலலிதா, சரஸ்வதி அம்மாளுக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவியும், அரசுஅடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டை இலவசமாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
ரூ. 5 லட்சம் நிதியும் சரஸ்வதி அம்மாளின் பெயரில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டு அதன் மூலம் மாதம் ரூ. 2917 வட்டிகிடைக்குமாறும் முதல்வர் வகை செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல தென்காசியைச் சேர்ந்த முகம்மது அஜீஸ்- சிக்கந்தர் தம்பதிகளுக்கு ஒரே பிரசவத்தில் பிறந்த 3 பெண்குழந்தைகளுக்கும் தலா ரூ. 1 லட்சம் வீதம் ரூ. 3 லட்சம் நிதியையும் முதல்வர் அறிவித்துள்ளார்.
இந்த நிதி 3 குழந்தைகளின் பெயரில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் ரூ. 1750 வட்டியைக் கொண்டுகுழந்தைகளைப் பராமரிக்க அரசு வகை செய்துள்ளதாகவும் அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications