இலங்கை அகதி முகாம்களில் போலீஸ் சோதனை
சென்னை:
இலங்கைத் தமிழ் அகதிகள் தங்கியுள்ள முகாம்களில் தமிழ்ப் போராளிகள் ஊடுறுவியுள்ளார்களா என்பதை அறிய போலீஸார்திடீர் சோதனை நடத்தினர்.
இந்த முகாம்களில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் யாராவது தங்கியிருக்கிறார்களா, தமிழ்ப் போராளிகள் யாரேனும்தங்கியுள்ளார்களா என்பது குறித்து அவ்வப்போது போலீஸார் சோதனை நடத்துவது வழக்கம்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாம்களில் போலீஸார் சனிக்கிழமைஅதிகாலை முதல் பிற்பகல் வரை சோதனை நடத்தினார்கள்.
ஈரோடு மாவட்டம் அரச்சலூர், ஈஞ்சம்பள்ளி, பவானி சாகர் ஆகிய இடங்களில் உள்ள முகாம்களில் எஸ்.பி. பாலசுப்ரமணியம்,டி.எஸ்.பி. மோகன் நவாஸ் ஆகியோர் தலைமையில் சோதனை நடந்தது. இதில் பவானி சாகர் முகாமில் அனுமதிக்கப்பட்டதைவிட கூடுதலாக 600 பேர் தங்கியிருந்தது தெரியவந்தது.
அதேபோல முகாமில் தங்கியிருக்க வேண்டிய 30 பேர் பவானி சாகர் நகர்ப்பகுதியில் தங்கியிருந்ததும் தெரியவந்தது. கூடுதலாகதங்கியிருந்தவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தினர். அவர்கள் தமிழ்ப் போராளிகளா என்பதுகுறித்தும் போலீஸார் விசாரித்தனர்.
கூடுதலாக யாரும் தங்கக் கூடாது. அப்படி யாராவது முகாமில் தங்கினால் அருகில் உள்ள காவல் நிலையங்களுக்குத் தெரிவிக்கவேண்டும் என்று அகதிகளை போலீஸார் எச்சரித்தனர்.












Click it and Unblock the Notifications