சிவகங்கை வங்கி: ஜெ.வுக்கு ப.சிதம்பரம் பாராட்டு
சென்னை:
சிவகங்கை மத்திய கூட்டுறவு வங்கிக்குக் கூடுதலாக ரூ. 12.50 கோடி நிதியுதவியை முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பதற்குமத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
நபார்டு வங்கி மேற்கொண்ட ஆய்வறிக்கையை ரிசர்வ் வங்கி, தமிழக அரசுக்கு அனுப்பி வைத்து சில அறிவுரைகளைவழங்கியிருந்தது. அந்த அறிவுரைகளை ஏற்று இந்த நிதியுதவியை தமிழக அரசு வழங்கியுள்ளதாக அறிகிறேன்.
சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் உடமையாளர் தமிழக அரசு தான். தமிழக அரசு தன்னுடைய பொறுப்பைஉணர்ந்து, ரிசர்வ் வங்கியின் அறிவுரையை ஏற்று, சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முன் வந்திருப்பதற்கு எனதுபாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிவகங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், வங்கியின் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்கிக்கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநரிடம் வலியுறுத்தி சொல்லியிருக்கிறேன்.
இந்தப் பிரச்சினைக்கு ரிசர்வ் வங்கி நல்ல முடிவை எடுக்கும். ரிசர்வ் வங்கியுடன் தமிழக அரசு ஒத்துழைக்கும் என்றுநம்புகிறேன் என்று கூறியுள்ளார் ப.சிதம்பரம்.