இலங்கைக்கு ஆயுதங்களா?: மீண்டும் பிரதமரை சந்தித்தார் வைகோ
டெல்லி:
இலங்கையுடன் எந்தவிதமான பாதுகாப்பு ஒப்பந்தத்தையும் இந்தியா செய்து கொள்ளக் கூடாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் சமீபத்தில் இலங்கை சென்றிருந்த வெளியுறவு அமைச்சர் நட்வர்சிங் அங்கு பேட்டியளிக்கையில், இலங்கையுடன்ராணுவ ரீதியிலான ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும் என்று கூறியிருந்தார்.
இதை பிரதமரிடம் எடுத்துக் கூறி நட்வர்சிங்கின் கருத்தை மத்திய அரசின் கருத்தாக நினைக்கவில்லை. உங்களதுஉறுதிமொழியிலிருந்து விலக மாட்டீர்கள் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தேன்.
மேலும், இலங்கைக்கு வழங்கப்படும் எந்த ராணுவ உதவியையும் அது இலங்கைத் தமிழர்களை அழிக்கவும், நசுக்கவுமே அந்தநாடு பயன்படுத்திக் கொள்ளும் என்பதையும் பிரதமரிடம் வலியுறுத்தினேன் என்று வைகோ கூறியுள்ளார்.
இலங்கையுடன், இந்தியா ராணுவ ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு பாமக, தமிழ் பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்டவையும்கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுதம் ஏந்த மாட்டோம்: ஈபிஆர்எல்எப்
இதற்கிடையே இலங்கையில் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா உதவ வேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலைமுன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்.) கோரிக்கை விடுத்துள்ளது.
பத்மநாபா நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி இன்று சென்னை வந்த இந்த அமைப்பின் கனடாநாட்டு பொறுப்பாளர் ஞானம், இலங்கையின் பிராந்திய பொறுப்பாளர் ஸ்டேனிஸ் ஆகியோர் கூறுகையில், எங்களுக்கு ஆயுதப்போராட்டத்தின் மீது இனி நம்பிக்கை இல்லை. இனிமேல் ஆயுதம் ஏந்த மாட்டோம்.
இலங்கையில் சுனாமி நிவாரணப் பணிகளை அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைத்து இலங்கை அரசு செயல்படுத்தவேண்டும்.
நாங்கள் இந்தியாவின் நண்பர்களாகவே இருக்கிறோம். இலங்கையில் நடைபெறும் கொலைகளை தடுத்து நிறுத்த இந்தியாமுன்வர வேண்டும். தமிழ் மக்களுக்கு ஜனநாயக ரீதியிலான தீர்வு காண இந்தியாவும், இந்திய மக்களும் உதவ வேண்டும்என்றனர்.