நுழைவுத் தேர்வு வழக்கு: தங்களையும் சேர்க்க பாமக கோரிக்கை
சென்னை:
பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்ததை எதிர்த்து தாக்கல்செய்யப்பட்டுள்ள வழக்கில் தங்களது கருத்துக்களையும் கூற வசதியாக தங்களையும் ஒரு தரப்பாக சேர்க்கவேண்டும் என்று பாமக தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் அனைத்தும் மொத்தமாக வருகிற 22ம் தேதி (புதன்கிழமை) தலைமை நீதிபதி மார்க்கண்டேயகட்ஜூ, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரிக்கப்படவுள்ளன.
மனு தாக்கல் செய்துள்ளவர்களில், மருத்துவ நுழைவுத் தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்த நாமக்கல்மாணவர் அருண்குமார் தாக்கல் செய்துள்ள மனுவும் அடங்கும்.
இந் நிலையில் பாமக மாணவர் சங்கம் சார்பில் இன்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. மாநில பாமக மாணவர்சங்க தலைவர் சரவணன் தாக்கல் செய்த இந்த மனுவில்,
நுழைவுத் தேர்வும், இம்ப்ரூவ்மென்ட் தேர்வும் ஏற்கனவே நடத்தப்பட்டு விட்ட நிலையில் அதை ரத்து செய்ததுசரியல்ல என்று மாணவர்களில் ஒருதரப்பினர் கூறுவது சரியானது அல்ல.
தமிழக அரசின் முடிவு பொது நலன் கருதி எடுக்கப்பட்டது. எனவே மாணவர்களின் இந்த வாதம் பொருந்தாது.தமிழகஅரசின் முடிவு மிகவும் சரியானது. இதனால் பல்லாயிரணக்கான மாணவர்கள் பலன் பெறுவார்கள்.
மாணவர்களில் ஒரு சிலரே எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் அவர்களது வாதத்தைப் பொருட்படுத்தக் கூடாது. இந்தப்பிரச்சினையில் எங்களது கருத்துக்களையும் கூற வசதியாக எங்களையும் ஒரு தரப்பாக சேர்க்க வேண்டும் என்றுசரவணன் கூறியுள்ளார். இந்த மனுவும் 22ம் தேதி விசாரிக்கப்படும்.