நாடு முழுவதும் பெட்ரோல் பங்குகள் மூடல்
டெல்லி:
கமிஷன் தொகையை உயர்த்தக் கோரி பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் நாடு முழுவதும் பெட்ரோல் பங்குகள் நேற்று நள்ளிரவு முதல் மூடப்பட்டன.
இதை வலியுறுத்தி கடந்த ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் பெட்ரோல் பங்குகள் ஒரு நாள் மூடப்பட்டன. ஆனாலும் இவர்களதுகோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை.
இதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் மேலும் ஒரு நாள் போராட்டம் நடத்த பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் முடிவுசெய்தனர். இதன்படி, நேற்று நள்ளிரவு முதல் இந்தப் போராட்டம் தொடங்கியது.
இதனால் டெல்லி, மும்பை, கொல்கத்தா உட்பட நாடு முழுவதும் பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சென்னைஉட்பட அனைத்து பகுதிகளிலும் பெரும்பாலான பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன. டெல்லியில் மொத்தமுள்ள 375ல் 24பங்குகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன.
எண்ணை நிறுவனங்கள் நடத்தும் ஒரு சில பெட்ரோல் பங்குகள் மட்டும் திறந்துள்ளன. இதனால் ஏராளமானோர் இங்கு நீண்டவரிசையில் காத்திருந்து தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பி சென்றனர்.
இந்தப் போராட்டம் குறித்து அகில இந்திய பெட்ரோலிய விற்பனையாளர் சங்கத் தலைவர் அஷோக் பட்வார் கூறுகையில், இன்றுநாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. நாங்கள் எங்களது ஒற்றுமையை காட்டி விட்டோம்.
கமிஷன் தொகையை உயர்த்தக் கோரி மத்திய அரசிடமும், எண்ணை நிறுவனங்க ளிடமும் நாங்கள் பலமுறை கோரிக்கைவிடுத்தோம். ஆனால் இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை.
இந்தப் போராட்டத்திற்குப் பிறகும் எங்களது கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் ஜூலை மாதம் 18ம் தேதி முதல் காலவரையற்றபோராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
இது குறித்து இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், எங்களது நிறுவனத்தின் கீழ் செயல்படும்பெட்ரோல் விற்பனை நிலையங்களில் போதுமான இருப்பு உள்ளது. ஒரு நாள் தேவையை நாங்கள் சமாளித்து விடுவோம்என்றார்.












Click it and Unblock the Notifications