உலக பாரம்பரிய சின்னமாகிறது ஊட்டி ரயில்
கோவை:
ஊட்டி மலைப்பாதை ரயிலை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க ஐக்கிய நாடுகள் சபையின் கலாச்சாரப்பிரிவான யுனெஸ்கோ முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூலை மாதம்வெளியிடப்படுகிறது.
இந்த மலைப்பாதையில் 200 வளைவுகள், 16 குகைகள், 250 பாலங்களை கடந்து இந்த ரயில் செல்கிறது.
ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்ட இந்த ரயில் பாதை வழியே இன்னும் தினமும் ரயில்கள் சென்றுகொண்டிருக்கின்றன. தென்னக ரயில்வேயின் பாலக்காடு கோட்டத்திற்கு உட்பட்ட இந்த நீலகிரி மலை ரயில்பாதைக்கு உலக பாரம்பரிய அந்தஸ்து வழங்க யுனெஸ்கோ தீர்மானித்துள்ளது.
இதற்காக தென்னக ரயில்வேயின் அழைப்பை ஏற்று யுனெஸ்கோ அமைப்பை சேர்ந்த ராபர்ட் லீ தலைமையில் 2பேர் கொண்ட குழு சமீபத்தில் ஊட்டிக்கு வந்து ஆய்வு நடத்தியது.
இந்த ஆய்வின் முடிவில் நீலகிரி மலை ரயில் பாதையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க யுனெஸ்கோமுடிவு செய்துள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அறிவிப்பு ஜூலை மாதம்வெளியாகும் என்று கூறப்படுகிறது.
தற்போது இந்த ரயிலை இயக்குவதின் மூலம் தென்னக ரயில்வேக்கு வருடத்திற்கு ரூ.4.20 கோடி நஷ்டம்ஏற்படுகிறது. பாரம்பரிய அந்தஸ்து கிடைக்கும் பட்சத்தில் வருடத்திற்கு ரூ. 50 லட்சம் யுனெஸ்கோவிடம் இருந்துபராமரிப்புச் செலவுகளுக்காகக் கிடைக்கும்.