திருச்சி: முதிய தம்பதியைத் தாக்கி பயங்கர கொள்ளை

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

திருச்சியில் வயதான கணவன், மனைவியை கொடூரமாகத் தாக்கி 20 பவுன் நகைகள்கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

திருச்சி தில்லை நகர் பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணியன். இவருக்கு 70 வயதுக்கு மேல் ஆகிறது. இவரதுமனைவி மீனாட்சி. இவர்களது வீட்டுக்கு இன்று அதிகாலை வந்த கொள்ளையர்கள், சுப்பிரமணியத்தைகடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் அவர் மயங்கி விழுந்தார். பின்னர் அவரை ஒரு அறையில் போட்டுப் பூட்டிவிட்டு, அதன் பின்னர் அவரதுமனைவி மீனாட்சியையும் கடுமையாகத் தாக்கினர்.

கழுத்தில் கத்தியை வைத்து போட்டிருக்கும் நகைகளை கழற்றித் தருமாறு மிரட்டியுள்ளனர். அவர் பயந்து போய்வளையல், தோடு உள்ளிட்டவற்றை கழற்றிக் கொடுத்தார். பின்னர் கழுத்தில் போட்டிருந்த தாலிச் சங்கிலியையும்அவர் கழற்ற முயற்சித்தார். ஆனால் அது வராமல் போகவே திணறியுள்ளார்.

இதைப் பார்த்த கொள்ளையன் தாலிச் சங்கிலியை அப்படியே இழுத்துள்ளான். இதில் மீனாட்சியின் கழுத்தில்ரத்தக் காயம் ஏற்பட்டு அவர் துடித்துள்ளார். பின்னர் கொள்ளையர்கள் இருவரையும் அப்படியே விட்டு விட்டுதப்பியோடினர்.

கொள்ளைச் சம்பவத்தாலும், தாக்குதலாலும் நிலை குலைந்து போன கணவனும், மனைவியும் குரல் எழுப்பவேஅக்கம் பக்கத்தில் இருந்தோர் ஓடி வந்து அவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.வயதான தம்பதியிடம் மிருகத்தனமாக கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+