ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வெறித் தாக்குதல்
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டும், அரிவாள்களால் சரமாரியாகவெட்டியும் அட்டூழியம் செய்துள்ளனர். இதில் 4 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர்.
மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது முன்னறிவிப்பின்றி சரமாரியாக சுட்டுத் தள்ளினர்.இதையடுத்து தமிழக மீனவர்கள் தப்பியோட முயன்ற போது, அவர்களைப் பிடித்து அரிவாள்களால் சரமாரியாகவெட்டித் தள்ளினர்.
இதில் 4 மீனவர்கள் வெட்டுக் காயம் அடைந்தனர். சின்னய்யா என்ற மீனவருக்கு தலை, கழுத்து, கால் ஆகியஇடங்களில் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டது.
இலங்கை கடற்படை வெறியர்களிடமிருந்து தப்பி இன்று அதிகாலை ராமேஸ்வரத்திற்கு வந்து சேர்ந்தனர் தமிழகமீனவர்கள்.
அங்கு அவர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு காயம்பட்டவர்களை கொண்டு சென்ற போது அங்கிருந்த டாக்டர்கள் சரிவர சிகிச்சை அளிக்கவில்லை எனத் தெரிகிறது.
இதையடுத்து மீனவர்கள் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் குதித்தனர். இதைத் தொடர்ந்தேடாக்டர்கள் விரைந்து வந்து சிகிச்சை மேற்கொண்டனர்.
படுகாயம் அடைந்த மீனவர்கள் சிலருக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. ராமேஸ்வரம் மீனவர்கள் மீதான இந்த தாக்குதல் தொடர்பாக ராமேஸ்வரத்தில் பெரும் பரபரப்புநிலவுகிறது.