திருக்குறுங்குடி: ஜெயேந்திரர் மனு மீது இன்று விசாரணை
சென்னை:
திருக்குறுங்குடி சிவன் சன்னதி இடிக்கப்பட்டது தொடர்பாக தன் மீது வழக்கு தொடர உத்தரவிடப்பட்டுள்ளதைஎதிர்த்து ஜெயேந்திரர் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்றுவிசாரணைக்கு வருகிறது.
இது ஆகம விதிகளுக்கு எதிரானது என்று கூறி ஸ்ரீரங்கம் திவ்யதேச பாரம்பரிய பாதுகாப்பு பேரவை என்றஅமைப்பின் செயலாளர் கிருஷ்ணமாச்சாரி போலீஸில் புகார் கொடுத்தார். ஆனால் அதன் பேரில் நடவடிக்கைஎடுக்கப்படவில்லை.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கிருஷ்ணமாச்சாரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்தஉயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.தினகரன், கிருஷ்ணமாச்சாரியின் புகாரின் பேரில், ஜெயேந்திரர் உள்ளிட்டோர் மீதுவழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து ஜெயேந்திரர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது. ஜெயேந்திரர் தவிர முதல்வர் ஜெயலலிதாவின் கேரள ஜோதிடரான உண்ணிகிருஷ்ணபணிக்கர் உள்ளிட்ட 3 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்கள் இன்று டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வருகிறது.