For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சங்கர மட முன்னாள் பக்தரான ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு விசாரணை ஜூலை 6ம் தேதிக்குஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் தம்பி ரகு, அப்பு உள்ளிட்ட 12 பேர்ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் அப்பு, ரவிசுப்ரமணியம் உள்ளிட்ட 5 பேர் மட்டுமே சிறையில்உள்ளனர். மற்றவர்கள் ஜாமீனில் விடுதலையாகி விட்டனர்.

இந்த வழக்கில் 600 பக்க குற்றப் பத்திரிக்கை ஏற்கனவே சென்னை சைதாப்பேட்டை 23வது குற்றவியல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. நேற்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அப்பு மட்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

இதையடுத்து விசாரணையை அடுத்த மாதம் 6ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உமா மகேஸ்வரி உத்தரவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X