For Daily Alerts
Just In
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு
சென்னை:
சங்கர மட முன்னாள் பக்தரான ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு விசாரணை ஜூலை 6ம் தேதிக்குஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் 600 பக்க குற்றப் பத்திரிக்கை ஏற்கனவே சென்னை சைதாப்பேட்டை 23வது குற்றவியல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. நேற்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அப்பு மட்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.
இதையடுத்து விசாரணையை அடுத்த மாதம் 6ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உமா மகேஸ்வரி உத்தரவிட்டார்.
Comments
Story first published: Thursday, June 23, 2005, 5:30 [IST]