சுனாமி: நார்வே தூதர்-புலிகள் பேச்சு தோல்வி
இலங்கையில் ஒருங்கிணைந்து சுனாமி நிவாரணப் பணிகளை மேற்கொள்வது குறித்து விடுதலைப் புலிகளுடன்நார்வே அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை.
இதைத் தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நார்வே வெளியுறவு துணை அமைச்சர் விடார்ஹெல்ஜெசன் இலங்கை வந்தார். அவர் முதலில் அதிபர் சந்திரிகாவை சந்தித்துப் பேசினார்.
இதையடுத்து நேற்று அவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்செல்வனையும் பிறதலைவர்களையும் சந்தித்துப் பேசினார். அப்போது, அதிபர் சந்திரிகா அளித்த வாக்குறுதிகளையும்,யோசனைகளையும் நார்வே அமைச்சர் விடுதலைப் புலிகள் தலைவர் தமிழ்செல்வனிடம் விளக்கினார்.
ஆனால், நிவாரணப் பணிகளை இணைந்து மேற்கொள்வதில் தெளிவான திட்டம் ஏதும் இலங்கை அரசிடம்இருந்து கிடைக்காததால் பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை.
இதனால் இந்த விஷயத்தில் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்று விடுதலைப் புலிகள் தரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்செல்வன் விடுத்துள்ள அறிக்கையில், ஒருங்கிணைந்து செயல்படும் ஒப்பந்தத்தில்கையெழுத்திடும்படி அதிபர் சந்திரிகா கூறுகிறார். இப்போதும் அதையே வலியுறுத்துகிறார். அது மட்டும்போதுமானதல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகள் தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு நார்வே அமைச்சர் ஹெல்கெசன் அம்பாறைக்குசென்று முஸ்லிம் தலைவர்களையும் சந்தித்து பேசினார்.