தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரிப்பு: வாசன் கவலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலை தருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர்ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
பல இடங்களில் வேலியே பயிரை மேய்வது போல, போலீஸாரே கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடுகிறார்கள் என்றுவரும் செய்தி ஒருபுறம் அதிர்ச்சி தருகிறது, மறுபுறம் கவலை தருகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளாக இல்லாமல், இப்போது தேர்தல் நெருங்கி வரும் வேளையில், புதிய அறிவிப்புகளைவெளியிடுகிறார் ஜெயலலிதா. ஆனால் இதன் மூலமெல்லாம் மக்களை அவர் ஏமாற்ற முடியாது.
இடைத் தேர்தலில் பயன்படுத்திய வழியை பொதுத் தேர்தலில் அவர் பயன்படுத்த முடியாது என்பதை அவர்புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார் வாசன்.












Click it and Unblock the Notifications