26ம் தேதி ம.பொ.சி. நூற்றாண்டு விழா
சன்னை:
‘சிலம்புச் செல்வர்‘ ம.பொ.சிவஞானத்தின் நூற்றாண்டு விழா வருகிற 26ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.
அண்ணா சாலை ராணி சீதை மன்றத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் தலைமைதாங்குகிறார். மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ம.பொ.சி.யின் உருவப் படத்தைத் திறந்து வைக்கிறார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ம.பொ.சியின் நூல்களை வெளியிடுகிறார். சாகித்ய அகாடமியின் படைப்பானம.பொ.சிவஞானம் என்ற நூலை மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிடுகிறார்.
விழாவில் எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், முன்னாள் அமைச்சர் ராசாராம், குமரி அனந்தன், தொழிலதிபர்வி.ஜி.சந்தோஷம் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
வ.உ.சி. மணி மண்டப திறப்பு விழா:
நெல்லை டவுணில் ரூ. 75 லட்சம் செலவில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருக்கு தமிழக அரசு மணிமண்டபம் கட்டியுள்ளது.
நெல்லை மாநகராட்சி அலுவலகம் எதிரே அமைக்கப்பட்டுள்ள இந்த மணி மண்டபத்தில், வ.உ..சி.யின்நினைவாக மாதிரி கப்பல், மாதிரி செக்கு மற்றும் நூலகம், வ.உ.சி.யின் முழு உருவ வெண்கலசிலை, நூலகம்ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
இதன் திறப்பு விழா இன்று நடக்கிறது. முதல்வர் ஜெயலலிதா மணி மண்டபத்தைத் திறந்து வைக்கிறார். இதில்கலந்து கொள்வதற்காக ஜெயலலிதா சென்னையிலிருந்து புறப்பட்டு சென்றார்.
இந்த நிகழ்ச்சியின் போது, ரூ. 228.38 லட்சம் அளவிலான திட்ட உதவிகளையும் ஜெயலலிதா வழங்குகிறார்.இதில் ரூ. 107.94 கோடி அளவுக்கு புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.












Click it and Unblock the Notifications