For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நுழைவுத் தேர்வு வழக்கு: திங்கள்கிழமை தீர்ப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்டுள்ளவழக்குகள் மீதான தீர்ப்பு வருகிற திங்கள்கிழமை வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிமார்க்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார்.

நுழைவுத் தேர்வு மற்றும் இம்ப்ரூவ்மென்ட் தேர்வுகளை ரத்து செய்ததை எதிர்த்து நூற்றுக்கணக்கான மாணவர்கள்சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை கடந்த 2 நாட்களாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கட்ஜூ, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லாஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. நேற்று மாலை விசாரணை முடிவடைந்து தீர்ப்புஒத்திவைக்கப்பட்டது.

இந் நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக மேலும் சில மனுக்கள் இன்று தலைமை நீதிபதி முன்பு விசாரணைக்குவந்தது. அப்போது இதே பிரச்சினையில் ஏற்கனவே விசாரணை முடிவடைந்து விட்டது. இதில் திங்கள்கிழமைதீர்ப்பு வழங்கப்படும் என்று கூறி அந்த மனுக்களை பைசல் செய்வதாக அறிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X