சேது சமுத்திர திட்டமும்.. புது ரேஷன் கார்டும்..: ஜெயாவின் பலே ஐடியா!
சென்னை:
சேது சமுத்திரத் திட்டத் தொடக்க விழா நடைபெறும் அதே ஜூலை 2ம் தேதி தமிழக அரசு புதிய குடும்பஅட்டைகளை வினியோகிக்க ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். இதன் மூலம் சேது சமுத்திரத் திட்ட தொடக்கவிழா செய்திகளை கொஞ்சம் அமுக்கிப் போட அதிமுக முயல்வதாகத் தெரிகிறது.
இந்த அட்டைகள் விநியோகிக்கும் பணி ஜூலை மாதம் 2ம் தேதி முதல் தொடங்கும் எனத் தெரிகிறது. விடுறை நாட்களில்அதாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளிலேயே புதிய குடும்ப அட்டைகள்வழங்கப்படும். தொடர்ந்து நான்கு வாரங்களுக்கு இந்தப் பணி நடைபெறும்.
மொத்தம் 1.55 கோடி பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் வினியோகிக்கப்படவுள்ளன.
சேது சமுத்திரத் திட்ட தொடக்க விழா மதுரையில் நடைபெறும் அதை ஜூலை 2ம் தேதி தான் புது ரேஷன்கார்டுகளும் வினியோகிக்கப்படுகிறது.
சேது சமுத்திர விழாவில் இதில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர்கருணாநிதி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 12 மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்ளவிருப்பதாக மத்திய அமைச்சர்டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு முறைப்படி அழைப்பு அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முறைப்படிஎன்றால், அமைச்சர் டி.ஆர்.பாலுவே நேரில் சென்று அழைப்பது தான் சரியானதாக இருக்கும் என்றுகூறப்படுகிறது. காரணம், பாலுவின் அமைச்சகம் தான் இந்தத் திட்டத்தை நிறைவேற்றப் போகிறது.
மன்மோகன்சிங், சோனியா காந்தியை ஏற்கனவே நேரில் சென்று தொடக்க விழாவுக்கு வருமாறுஅழைத்துள்ளதாக பாலுவே சமீபத்தில் தெரிவித்திருந்தார். அப்படி இருக்கையில், தமிழகத்தில் நடைபெறும் ஒருவரலாற்றுச் சிறப்பு வாய்ந்த விழாவுக்கு, தமிழக முதல்வரை நேரில் அழைக்காமல் அழைப்பு அனுப்பப்படும்என்று பாலு கூறியிருப்பது சர்ச்சையை எழுப்பியுள்ளது.
தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழக தலைவர் ரகுபதி மூலம் ஜெயலலிதாவுக்கு அழைப்பைக் கொடுக்க பாலுமுடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
ஜெயலலிதாவின் பலே ஐடியா:
இந் நிலையில் தான் தமிழகத்தில் ஒன்றரை கோடி பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவது ஜூலை 2ம் தேதிதொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
சேது சமுத்திரத் திட்ட விழாவன்று இந்தப் பணியை தொடங்கினால், வெளியூர்களிலிருந்து மதுரைக்குக் குவியும்கூட்டத்தைக் குறைக்க முடியும் என அதிமுக தரப்பு கருதுகிறது.
மேலும், குடும்பத் தலைவர்கள் தான் நேரில் சென்று புதிய குடும்ப அட்டைகளை வாங்க முடியும் என்றும் அரசுஅறிவிக்கும் எனத் தெரிகிறது.
மக்களின் அத்தியாவசியத் தேவையாகிவிட்ட குடும்ப அட்டைகளை பெறுவதற்கான ஆர்வத்தை தூண்டிவிடுவதன் மூலமும், ஜூலை 2ம் தேதியே இந்தப் பணியை தொடங்குவதன் மூலமும் சேது சமுத்திரத் திட்டத்தைவைத்து மீடியாவின் முழு கவனத்தையும் தன் பக்கமாகத் திருப்பும் திமுகவின் திட்டத்தை ஓரளவுக்கேனும்முறியடிக்க முயலும் என அதிமுக தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
மேலும் புதிய குடும்ப அட்டை வினியோகப் பணியை ஜெயலலிதாவே தொடங்கி வைக்கக் கூடும் என்றும், இதன்மூலம் சேது சமுத்திரத் திட்டத் தொடக்க விழாவுக்கு செல்வதை ஜெயலலிதா தவிர்க்கலாம் என்றும்கருதப்படுகிறது.
எதிலெல்லாம் அரசியல்!