பெட்ரோல் விலை: கருணாநிதி நியாயப்படுத்தியது தவறு- ஜெ
சென்னை:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை திமுக தலைவர் கருணாநிதி நியாயப்படுத்தியிருப்பது தவறான செயலாகும்.பொதுமக்களின் மீது அவருக்கு இருக்கும் அக்கறையின்மையையே இது காட்டுகிறது என்று முதல்வர்ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்து திமுக தலைவர் கருணாநிதி ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், வேறு வழியில்லாமல் தான்மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது என்றும், தமிழக அரசுக்கு உண்மையிலேயே மக்கள் மீதுஅக்கறை இருக்குமானால் பெட்ரோல் மீது விதிக்கப்படும் 27 சதவீத வரியை குறைக்கலாமே என்று கூறியிருந்தார்.
கருணாநிதியின் அறிக்கைக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று பதில் அறிக்கை விடுத்துள்ளார். அதில்,கருணாநிதியின் அறிக்கை எனக்கு மிகவும் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.
மத்திய அரசில் தொடர்ந்து ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்ற ஆசையால் மத்திய அரசு எடுக்கும் தவறானசெயல்களுக்கு அவர் துணை போகிறார். இப்போது தான் அவரது சுயரூபம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.மக்களைப் பற்றி அவர் துளியும் சிந்திப்பதில்லை.
மேலும் பெட்ரோல் விலை உயர்வுக்கு தமிழகத்தை சேர்ந்த 12 அமைச்சர்களில் ஒருவர் கூட் எதிர்ப்புதெரிவிக்காதது வேதனையானது என்று குறிப்பிட்டுள்ளார்.