For Daily Alerts
Just In
அப்துல் கலாம் 29ம் தேதி சென்னை வருகிறார்
சென்னை:
சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வருகிற 29ம் தேதி சென்னைக்குவருகிறார்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பார்வையிட்டு வருகிறார். கடந்த மாதம் அந்தமான்தீவுகளுக்கு சென்று அங்கு சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அப்துல் கலாம் பார்வையிட்டார்.
இந் நிலையில் வருகிற 29ம் தேதி சென்னைக்கு கலாம் வருகிறார். அங்கு சுனாமியால் பாதிக்கப்பட்ட சீனிவாசபுரம்,திருவொற்றியூர், காசிமேடு உள்ளிட்ட பகுதிகளை கலாம் பார்வையிடுகிறார்.
கலாம் வருகையையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சென்னையில் வேறு சிலநிகழ்ச்சிகளிலும் கலாம் கலந்து கொள்வார் எனத் தெரிகிறது.
Story first published: Friday, June 24, 2005, 5:30 [IST]