ஜெ. ஒரு கிணற்றுத் தவளை: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கிணற்றை விட்டு வெளியே வர முயலாமல் உள்ளுக்குள்ளேயே வாழ்க்கை நடத்த முயலும் தவளையைப் போலஜெயலலிதா தன்னைத் தானே புகழ்ந்து பேசிக் கொள்கிறார் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், திருநெல்வேலியில் நடந்த விழாவில் அரிஸ்டாட்டில் குறித்துக்கூறி அவருடன் தன்னை ஒப்பிட்டுக் கொண்டுள்ளார் ஜெயலலிதா.

மக்களை வழி நடத்திச் செல்லும் அரசும் சட்டத்திற்கு உட்பட்டது தான் என்று அரிஸ்டாட்டில் கூறியுள்ளார்.ஆனால் ஜெயலலிதா அப்படித் தான் நடந்து கொள்கிறாரா?

போலி வாக்காளர்களை சேர்த்து விட்டு, தங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று அமைச்சர் ஒருவரேஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது தான் சட்டத்திற்கு உட்பட்டு நடந்து கொள்ளும் போக்கா?

பணியிழந்த பத்தாயிரம் சாலைப் பணியாளர்கள், அரசால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், நெசவாளர்கள், அரசுஊழியர்கள், ஆசியர்கள் அனைவருமே ஜெயலலிதாவைப் புகழவா செய்வார்கள்?

கிணற்றுக்குள் சிக்கிக் கொண்ட தவளை அதை விட்டு வெளியே வர நினைக்காமல் அதற்குள்ளேயே வாழநினைப்பது போல தன்னைத் தானே புகழ்ந்து பேசிக் கொள்கிறார் ஜெயலலிதா என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+