இந்திய தொழிலாளர்களை துன்புறுத்தவில்லை: மலேஷிய அரசு
கோலாலம்பூர்:
மலேஷியாவில் 400 இந்திய தொழிலாளர்களை ஒரு நிறுவனம் அறையில் பூட்டி வைத்துகொடுமைப்படுத்தியதாக வெளியான தகவல் உண்மையல்ல அன்று மலேஷிய குடியுரிமை வழங்கல் துறைதெரிவித்துள்ளது.
இதனால் பத்மராஜன் என்ற இந்திய தொழிலாளி மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.பத்மராஜனுக்கு சரியான சிகிச்சை அளிக்க அவர் வேலை பார்த்த நிறுவனம் முன் வராததே இறப்புக்கு காரணம்என்று கூறப்பட்டது. இந்த விவகாரம் மலேஷியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து இரு தினங்களுக்கு முன் மலேஷிய உள்துறை அமைச்சர் அஸ்மி காலித் கூறுகையில், வெளிநாட்டுத்தொழிலாளர்களை கொடுமைப்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இந்தியதொழிலாளர்கள் 400 பேர் கொடுமைப்படுத்தப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
இந் நிலையில், மலேஷிய குடியுரிமை வழங்கல் துறை இயக்குனர் இஷாக் முகமது கூறுகையில், இந்தியதொழிலாளர்கள் 400 பேர் துன்புறுத்தப்பட்டதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை.
இவர்கள் பணிபுரிந்ததாக கூறப்படும் பிசிஏ சர்க்கியூட் டெக்னாலஜி என்ற நிறுவனம் அப்படி ஒரு சம்பவமேதங்களது நிறுவனத்தில் நடக்கவில்லை என்று கூறியுள்ளது. அந்த நிறுவனத்தில் இந்தியா, நேபாளம், வங்காளதேசம் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளை சேர்ந்த 626 தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள்.
இது போல பத்மராஜன் என்பவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு தான் இறந்தார். அவர் அறையில்அடைத்து வைக்கப்பட்டதால் தான் இறந்தார் என்று கூறப்படுவது உண்மையல்ல. அவருக்கு பல முறை முறையானசிகிச்சை அளிக்கப்பட்டதற்கு ஆதாரங்கள் உள்ளன என்றார்.
இதற்கிடையே இந்திய தொழிலாளர்கள் 400 பேர் கொடுமைப்படுடத்தப்பட்டதாக தங்களுக்கு தகவல் எதுவம்வரவில்லை என்று மலேஷியாவிலுள்ள இந்திய தூதரகமும் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications