பெண் மானபங்கம்: காவல்துறைக்கு தலைமை நீதிபதி கண்டனம்
சென்னை:
புகார் கொடுக்க வந்த பெண்ணை காவலர்களே மானபங்கப்படுத்தியுள்ளது வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளதாகசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விசாரித்த மாநில மனித உரிமை ஆணையம் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு தருமாறு தமிழகஅரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் இந்த இழப்பீடு இதுவரை கொடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து நாகு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த தலைமை நீதிபதிகட்ஜு, போலீஸாரின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
பொதுமக்களின் உயிருக்கும், கண்ணியத்திற்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய கடமையிலிருந்து காவல்துறை தவறிவருகிறது. புகார் கொடுக்க வந்தவரையே மானபங்கம் செய்துள்ளது வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது.காவல்துறையின் நடவடிக்கை கவலை தருவதாக உள்ளதாக தெரிவித்தார்.
பின்னர் இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications