For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரவிக்கு மிரட்டல்: வழக்கை வாபஸ் பெற அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சங்கரராமன் கொலை வழக்கில் அப்ரூவரான ரவிசுப்ரமணியத்தை சிறைக்குச் சென்றதாக ஜெயேந்திரர் தரப்புவழக்கறிஞர்கள் மீது தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெறுமாறு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.

சங்கரராமன் கொலை வழக்கில் ரவிசுப்ரமணியம் அப்ரூவர் ஆகியுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்தொடர்ந்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை ஜெயேந்திரர் தரப்பு வழக்கறிஞர்களான நபீசா பானு, ரேவதி ஆகியோர் சிறைக்கு சென்று மிரட்டியதாக,ரவிசுப்ரமணியத்தின் மனைவி சித்ரா, காஞ்சிபுரம் போலீஸில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து இரு வழக்கறிஞர்கள் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு செங்கல்பட்டுநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் நபீசா பானுவும், ரேவதியும் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த மனு, தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் முன்னிலையில்இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நபீசா பானு, ரேவதி ஆகியோர் சார்பில் தெரிவிக்கையில்,ரவிசுப்ரமணியத்தை எந்தக் கட்டத்திலும் நாங்கள் மிரட்டவில்லை. எதிர்காலத்திலும் மிரட்ட மாட்டோம் எனஉறுதி கூறப்பட்டது.

இதையடுத்து இரு வழக்கறிஞர்கள் மீதான புகாரை திரும்பப் பெறுமாறு அரசு வழக்கறிஞருக்கு தலைமை நீதிபதிகட்ஜூ உத்தரவிட்டார். மேலும், நபீசா பானு, ரேவதி ஆகிய இருவரும் சென்னையில் தங்கியிருக்க வேண்டும்.

உயர்நீதிமன்ற அனுமதி இல்லாமல் சென்னையை விட்டு வெளியேறக் கூடாது என்றும் நீதிபதிகள்உத்தரவிட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X