காவல் நிலையத்தில் பைக் திருடிய சப்-இன்ஸ்பெக்டர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே ஓட்டேரி காவல் நிலையத்தில் சாராய வியாபாரிகளிடம் பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்தமோட்டார் சைக்கிள்களைத் திருடி விற்றதாக அதே காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அப்பகுதியில் சாராய வியாபாரிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஏராளமான மோட்டார் சைக்கிள்கள்உள்ளிட்ட பொருட்கள் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தன.
இவற்றில் சிலவற்றை திருடி விற்று விட்டதாக சப் இன்ஸ்பெக்டர் மீது புகார் வந்தது. இதுகுறித்து அதே காவல்நிலையத்தில் பணியாற்றும் மற்றொரு சப் இன்ஸ்பெக்டரான நாகலிங்கம் என்பவர் விசாரணை நடத்தினார். இதில்ஏழுமலை மீதான புகார்கள் உண்மை என்று தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து ஏழுமலையை போலீஸார் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.நீதிபதி, ஏழுமலையை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications