தமிழில் தந்தி அனுப்பும் வசதி ரத்தாகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழில் தந்தி அனுப்பும் வசதியை ரத்து செய்ய மத்திய தொலைத் தொடர்புத் துறை முடிவு செய்துள்ளதாககூறப்படுகிறது.

இந்திய மொழிகளில் தந்தி அனுப்பும் வசதி கடந்த 1994ம் ஆண்டு அப்போதைய பிரதமர் நரசிம்மராவ்ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, அதே ஆண்டு ஜனவரி 14ம் தேதி முதல்தமிழகத்தில் 25 தபால் நிலையங்களில் தமிழில் தந்தி அனுப்பும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஆரம்பத்தில் இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் தற்போது வரவேற்பு மிக மோசமாக உள்ளது.

இதைத் தொடர்ந்து தமிழில் தந்தி அனுப்பும் வசதியை ரத்து செய்ய மத்திய தொலைத் தொடர்புத் துறை(திமுகவைச் சேர்ந்த தயாநிதி மாறன் தான் இத்துறைக்கு அமைச்சர்!) முடிவு செய்துள்ளதாக செய்திகள்வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் தமிழில் தந்தி அனுப்பும் வசதி உள்ள தந்தி அலுவலகங்களில் வருடத்திற்கு 5 தந்திகள் தான் தமிழில்அனுப்பப்படுகின்றனவாம். அதுவும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி தான் இத்தனை தந்திகள் தமிழில்அனுப்பப்படுகின்றன.

மற்ற நாட்களில் ஆங்கிலத்தில் அனுப்பப்படும் தந்திகள் தான் அதிகளவில் உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் தந்தி முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, திராவிடக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், தமிழ் இயக்கங்களைச்சேர்ந்தவர்கள் தான் அதிக அளவில் தமிழ் தந்தி வசதியை பயன்படுத்தி வந்தனர்.

சென்னையில் உள்ள தங்களது அமைப்பின் தலைவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து உள்ளிட்ட நாட்களின் போதுதமிழில் தந்தி அனுப்புவதை அவர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால் போகப் போக தமிழில் தந்திஅனுப்புவதை அவர்கள் ஏனோ நிறுத்தி விட்டார்கள்.

பொதுமக்களில் முக்கால்வாசிப்பேர் தமிழில் தந்தி அனுப்புவதில்லை. நினைவு தெரிந்த நாள் முதலாகஆங்கிலத்திலேயே தந்தி அனுப்புவதை வழக்கமாகக் கொண்டு விட்டதால் தமிழுக்கு மாற அவர்கள் தயாராகஇல்லை.

தமிழகத்தில் தற்போது சென்னை அண்ணா சாலை, மாம்பலம், மயிலாப்பூர், வேலூர், புதுவை, கரூர், சேலம்,புதுக்கோட்டை, கும்பகோணம், திருச்சி, ஈரோடு, சேலம், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய ஊர்களில்25 தபால் அலுவலகங்களில் தமிழ் மூலம் தந்தி அனுப்பும் வசதி உள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக இந்த தந்தி அலுவலகங்களில் தமிழில் தந்தி அனுப்பும் டெலிபிரிண்டர்கள்செயல்படாமல் மூலையில் போடப்பட்டுள்ளனவாம். தமிழ் தந்திக்கு வந்த இந்த சோதனையால் பேசாமல் தமிழ்தந்தி முறையை மூடி விடலாமா என்று தொலைத் தொடர்புத் துறை யோசித்து வருகிறதாம்.

தமிழை வைத்து இப்போது தமிழக அரசியல்வாதிகளிடையே பெரும் அக்கப் போரே நடந்து வரும் நிலையில்அருமையான ஒரு வசதியை தமிழகம் இழக்கப் போகிறது.

குமரி அனந்தன் எதிர்ப்பு:

இதற்கிடையே, தமிழில் தந்தி அனுப்பும் வசதியை நிறுத்தக் கூடாது என்று குமரி அனந்தன் வேண்டுகோள்விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், கடுமையான முயற்சிக்குப் பின்னரேமணியார்டர் படிவத்தில் தமிழும், தமிழில் தந்தி கொடுக்கும் வசதியும் வந்தன.

அந்த வசதி வேண்டுமென்பதில் காட்டிய முனைப்பை, தமிழ் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதில்தமிழ் ஆர்வலர்கள் காட்டவில்லை. அது நம்முயை குறை தான்.

இந்த விழிப்புணர்வை ஊடகங்களும் ஏற்படுத்ததவில்லை. ஆனாலும் இந்த வசதியை நிறுத்தாமல் அதிகம் பேர்பயன்படுத்தும் வழிமுறைகளை ஒரு கூட்டு முயற்சியாக மேற்கொள்ளலாம்.

தமிழில் மென்பொருளை கொண்டு வந்த மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் இதற்கு ஆவண செய்யவேண்டும்என்று குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+