இப்படியும் பிரச்சினை வரலாம் ..
சென்னை:
சென்னை அருகே கூடுவாஞ்சேரியில், நிலத் தரகர் ஒருவர் தொடர்ந்து ஒரு மணி நேரமாக செல்போனில் பேசிக்கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த அருகில் இருந்தவர்கள், அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர்.இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் கோபிநாதன். இவர் ஒரு நிலத்தரகர். கோபிநாதன் அப்பகுதியில்உள்ள ஹோட்டலில் சாப்பிட்டுக் காண்டிருந்தார். அப்போது அவரது செல்போனில் அழைப்பு வந்துள்ளது.இதையடுத்து சாப்பிட்டவாறே பேசத் தொடங்கினார் கோபிநாதன்.
பேசினார், பேசினார் சுமார் ஒரு மணி நேரமாக பேசிக் கொண்டே இருந்தார். இதனால் அவருக்கு அருகில்அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த அருண்குமார், ஜெயப்பிரகாஷ், செல்வம், ரங்கநாதன், பாண்டியன்ஆகியோர் ஆத்திரமடைந்தனர்.
பேசுவதாக இருந்தால் வெளியே போய் பேசுங்கள், எங்களுக்கு இடையூறாக இருக்கிறது என்று கோபிநாதனிடம்சொல்லிப் பார்த்துள்ளனர். இதுதொடர்பாக அவர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றி பெரிய தகராறாக மாறியது.
ஹோட்டலில் இருந்த உருட்டுக் கட்டைகளால் கோபிநாதனை 5 பேரும் சேர்ந்து சரமாரியாகத் தாக்கினர். இதில்கோபிநாதன் படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீஸில் அவர் புகார் கொடுத்தார். போலீஸார் தலைமறைவான 5 பேரையும்பிடித்து கைது செய்தனர். அவர்கள் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் சிறைக் காவலில்வைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications