கொலை வழக்கு: 8 நாளில் தீர்ப்பு கூறி உலக சாதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கொலை வழக்கில் 8 நாளில் தீர்ப்பு கூறி சென்னை நீதிமன்றம் உலக சாதனை படைத்துள்ளது.

சமீப காலமாக தமிழக நீதிமன்றங்கள், குறிப்பாக சென்னையில் உள்ள நீதிமன்றங்கள் விரைவாக தீர்ப்பு கூறிசாதனை படைத்து வருகின்றன. இந் நிலையில் ஒரு கொலை வழக்கில் 8 நாட்களிலேயே தீர்ப்பு கூறி உலகசாதனை படைக்கப்பட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வரதராஜ் என்பவருக்கும்ஓரினச் சேர்க்கை பழக்கம் இருந்தது. இருவரும் திருமணமாகாதவர்கள்.

கடந்த 16ம் தேதி இரவு குடித்து விட்டு தனது மீன்பாடி வண்டி மீது தங்கராஜ் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போதுஅங்கு வந்த வரதராஜ், தங்கராஜை சந்தோஷமாக இருக்க அழைத்துள்ளார். என்னால் முடியாது என்று தங்கராஜ்மறுத்துள்ளார்.

இதனால் கோபமடைந்த வரதராஜ், 17ம் தேதி அதிகாலை கத்தியால் தங்கராஜை சரமாரியாகக் குத்தி கொலைசெய்தார். அதன் பின்னர் தலைமறைவாகி விட்டார்.

அவரை போலீஸார் 6 மணி நேரத்தில் தேடிப் பிடித்துக் கைது செய்தனர்.

இது தொடர்பாக சென்னை முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 3 நாட்களில்அதாவது 20ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி செல்வக்குமார் வழக்கை விசாரித்துவெள்ளிக்கிழமை (24ம் தேதி) தீர்ப்பு வழங்கினார்.

குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிப்பதாக நீதிபதி அறிவித்தார். இதன் மூலம் 8நாட்களிலேயே குற்றவாளிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இந்த கொலை வழக்கில் மிகவும் துரிதமாக செயல்பட்டு விசாரணை நடத்தி முடித்ததற்காக காவல்துறையினருக்குநீதிபதி தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

சமீபத்தில் மாம்பலம் பகுதியில் நடந்த கொலை வழக்கில் 16 நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட்டு சாதனைபடைக்கப்பட்டிருந்தது. அதை தங்கராஜ் கொலை வழக்கு முறியடித்து விட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+