For Daily Alerts
Just In
ஜெ. இன்று டெல்லி செல்கிறார்
சென்னை
தேசிய வளர்ச்சிக் கவுன்சில் மற்றும் மாநில கவுன்சில் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஜெயலலிதா இன்றுமாலை டெல்லி செல்கிறார்.
தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டம் நாளை (திங்கள்கிழமை) காலை நடக்கிறது. இதையடுத்து மாநிலங்களுக்கிடையிலானகவுன்சில் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடக்கிறது.
இரு கூட்டங்களிலும் கலந்து கொள்வதற்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஜெயலலிதா டெல்லிக்கு புறப்பட்டுசெல்கிறார்.
இரு கூட்டங்களிலும் கலந்து கொள்ளும் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தும் பேசுகிறார். பிரமரைசந்திக்கும்போது காவிரி நீர்ப் பிரச்சினை, சேது சமுத்திரத் திட்டத் தொடக்க விழா குறித்த தனது கருத்துக்கள் உள்ளிட்டவைகுறித்து விவாதிப்பார் எனத் தெரிகிறது.
தனது டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு செவ்வாய்க்கிழமை இரவு ஜெயலலிதா சென்னை திரும்புவார்.
Story first published: Sunday, June 26, 2005, 5:30 [IST]