ஜெ.வை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்: ராமதாஸ்
சென்னை:
சேது சமுத்திரத் திட்டத்தை முடக்க நினைக்கும் முதல்வர் ஜெயலலிதாவை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று பாமகநிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சேது சமுத்திரத் திட்ட தொடக்க விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில்,
சேது சமுத்திரத் திட்டத் தொடக்க விழாவை கடலோர பகுதியில் நடத்தாமல் மதுரையில் நடத்தவுள்ளது குறித்து ஜெயலலிதாவிமர்சித்துள்ளார்.
இதே ஜெயலலிதா, தொலை தூர மாவட்டங்களுக்கான திட்டங்களை சென்னையிலிருந்தே பலமுறை தொடங்கிவைத்துள்ளதை அவருக்கு நான் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
சேது சமுத்திரத் திட்டத்தினால் சுற்றுச்சூழல் ஆபத்து இருப்பதாகவும், அதனால் தமிழக மக்களுக்கு டி.ஆர்.பாலு துரோகம்செய்வதாக கூறும் ஜெயலலிதா, கடல் நீரைக் குடி நீராக மாற்றும் திட்டத்தில் அக்கறை காட்டாமல் இருந்ததால், மத்திய அரசின்ஆயிரம் கோடி ரூபாயை தமிழகம் இழந்துள்ளது. இது மட்டும் தமிழகத்திற்கு செய்த துரோகம் இல்லையா?
சேது சமுத்திரத் திட்டத்திற்கு முட்டுக் கட்டை போட ஜெயலலிதா நினைப்பது தமிழகத்திற்கு அவர் செய்யும் மிகப் பெரியதுரோகம்.
இதை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள். சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள் என்றுகூறியுள்ளார் ராமதாஸ்.