For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குற்றவாளிகளுக்குத் தண்டனை: காவல்துறைக்கு ஜெ. பாராட்டு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

குற்றவாளிகளுக்கு குறுகிய காலத்தில் தண்டனை பெற்றுத் தருவதில் தமிழக காவல்துறை சாதனைகளை மிஞ்சிய சாதனைபடைத்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: குற்றங்களின் எண்ணிக்கையைக் குறைத்து, குற்றங்களைக் கண்டுபிடிக்கும்எண்ணிக்கையை அதிகரித்து, தமிழக காவல்துறை சாதனை படைத்து வருகிறது.

குற்றப்பத்திக்கை தாக்கல் செய்த 44 நாட்களிலேயே குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்த சாதனை கடந்த 2004ம்ஆண்டு டிசம்பர் 16ம் தேதி நிகழ்த்தப்பட்டது.

இதேபோல கடந்த பிப்ரவரி 7ம் தேதி பதிவு செய்த வழக்கில் 29 நாட்களில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டது.இதை சட்டமன்றத் தொடரிலேயே பாராட்டியுள்ளேன்.

இவற்றையெல்லாம் விஞ்சும் வகையில் ஒரு வழக்கில் 17 நாட்களிலும், இன்னொரு வழக்கில் 16 நாட்களிலும்குற்றவாளிகளுக்கு கடந்த மே மாதம் ஆயுள் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் காவல்துறை சாதனைபடைத்துள்ளது.

இந்த சாதனைகளையெல்லாம் மிஞ்சும் வகையில், சென்னை மயிலாப்பூரில் தங்கராஜ் என்பவர் கொலை செய்யப்பட்டவழக்கில் 8 நாட்களிலேயே எதிரிக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

துரிதமாக விசாரணை மேற்கொண்டு தண்டனை பெற்றுத் தந்து சாதனையை விஞ்சிய சாதனையைப் படைத்தகாவல்துறையினருக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X