ஒருங்கிணைப்புக் கூட்டத்தை புறக்கணிப்போம்: மத்திய அரசுக்கு இடதுசாரிகள் மிரட்டல்
டெல்லி:
பெல் உள்பட லாபகரமாக இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முடிவை கண்டித்து சோனியாதலைமையில் நடக்கவுள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை புறக்கணிக்க இடது சாரிகள்முடிவு செய்துள்ளன.
இந் நிலையில் சோனியா தலைமையில் நடைபெறவுள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில்கலந்து கொள்ளப்போவதில்லை என்று இடதுசாரிகள் கூட்டாக முடிவு செய்துள்ளன.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரட் நிருபர்களிடம் கூறுகையில், பொதுத்துறைநிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பது என்ற முடிவை நாங்குகள் ஆரம்பம் முதல் எதிர்த்து வருகிறோம்.
பல முறை நடந்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களிலும் இதை வலியுறுத்தியுள்ளோம். ஆனாலும் எங்கள் கோரிக்கையைமத்திய அரசு அலட்சியம் செய்து பொதுத்துறை பங்குகளை விற்க முடிவு செய்துள்ளது.
எனவே தற்போது நடைபெறவுள்ள ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை என்று முடிவு செய்துள்ளோம்என்றார்.












Click it and Unblock the Notifications