தர்மபுரி பஸ் எரிப்பு: டிரைவர்கள் சாட்சியம்
சேலம்:
தர்மபுரியில் அதிமுகவினர், கோவை விவசாய பல்கலைக்கழக மாணவிகள் சென்ற பேருந்தை எரித்த வழக்கில் 2 அரசு பேருந்துஓட்டுநர்கள், ஒரு நடத்துனர் ஆகியோர் இன்று சேலம் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர்.
தர்மபுரி அருகே இலக்கியம்பட்டி என்ற இடத்தில் அதிமுகவினர் கோவை விவசாய பல்கலைக்கழக பேருந்துக்கு தீ வைத்ததில் 3மாணவிகள் உயிரோடு எரிந்து சாம்பலாயினர்.
இந்த வழக்கு சேலம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இன்று நீதிபதி கிருஷ்ணராஜாமுன்னிலையில் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள 31 அதிமுகவினரும்ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
இன்றைய விசாரணையின் போது, சம்பவம் நடந்த போது அதிமுகவினரால் தாக்கப்பட்ட அரசு பேருந்தின் ஓட்டுனர்கள்தாமோதரன், விஸ்வநாதன், நடத்துனர் கணேசன் ஆகியோர் சாட்சியம் அளித்தனர்.
இவர்களில் தாமோதரன் முன்பு அளித்த சாட்சியத்தை மாற்றி கூறியதால் அவரை பிறழ் சாட்சியாக நீதிபதி அறிவித்தார். இந்தவழக்கில் நாளையும், நாளை மறுநாளும் விசாரணை தொடர்ந்து நடைபெறும்.