சேது சமுத்திரம்: வழக்கு போடுமா தமிழக அரசு? ஜெ. பதில்
டெல்லி:
சேது சமுத்திரத் திட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவது குறித்து இப்போதைக்கு சொல்வதற்கில்லை என்று முதல்வர்ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டம் இன்று பிரதமர் தலைமையில் நடக்கிறது. நாளை மாநிலங்களுக்கிடையிலானமன்றக் கூட்டம் நடக்கிறது.
இந்த இரு கூட்டங்களிலும் கலந்துகொள்வதற்காக முதல்வர் ஜெயலலிதா டெல்லி சென்றுள்ளார். விமான நிலையத்தில் தன்னைச்சந்தித்த செய்தியாளர்களிடம் ஜெயலலிதா பேசுகையில், சேது சமுத்திரத் திட்டம் குறித்து எனது நிலையை ஏற்கனவே தெளிவாகதெரிவித்துள்ளேன்.
தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் முறையான அனுமதியைக் கூடப் பெறாமல் இந்தத் திட்டத்திற்கு அடிக்கல்நாட்டுகிறார்கள். இதில் உள்ள ஆபத்து குறித்து எனது அறிக்கையில், மிகத் தெளிவாக கூறியிருக்கிறேன். இதற்கு மேல்இப்பிரச்சினையில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
இப்பிரச்சினை தொடர்பாக நீதிமன்றத்தை நாடுவது குறித்து இப்போது சொல்வதற்கில்லை என்றார் ஜெயலலிதா. பிரதமரைசந்திக்கும் திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு அதுகுறித்து இப்போது கூற முடியாது என்று தெரிவித்தார் ஜெயலலிதா.
காவிரிப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் இரு கூட்டங்களிலும் பேசப் போவதாகவும் ஜெயலலிதாதெரிவித்தார்.
முன்னதாக டெல்லி வந்த ஜெயலலிதாவை அதிமுக எம்.பிக்கள் டி.டி.வி தினகரன், கோகுல இந்திரா, எஸ்.எஸ்.சந்திரன், ஜோதி,தங்க தமிழ்ச் செல்வன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.












Click it and Unblock the Notifications