பொது செயல் திட்டத்தில் உறுதி வேண்டும்: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்
சென்னை:
குறைந்த பட்ச தேசிய பொது செயல் திட்ட முடிவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுதேவையில்லாதது. எனவே குறைந்த பட்ச செயல் திட்டத்தில் உறுதியாக இருங்கள் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு திமுகதலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
பெல், என்டிபிசி, ஓஎன்ஜிசி உள்பட அதிக லாபம் தரும் அரசு நிறுவனங்களின் 49 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்க மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய அரசுக்கு ஆதரவளித்து வரும் இடது சாரிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
தங்களது எதிர்ப்பைக் காட்டும் வகையில் இனிமேல் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில்கலந்து கொள்ளப் போவதில்லை என்று நேற்று இடது சாரிக்கட்சிகள் அறிவித்தன. இதனால் மத்திய அரசுக்கு நெருக்கடிஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கம்யூனிஸ்ட் தலைவர்களை சமரசப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. சோனியாவும் தூதர் ஒருவரைஅனுப்பியுள்ளார். கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு புதிய உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந் நிலையில் மத்தியில் ஆளும் கூட்டணியில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் சிக்கலை தீர்க்கும் முயற்சியில் திமுக தலைவர்கருணாநிதியும் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக அவர் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோருக்கு கடிதம்எழுதியுள்ளார்.
அதில், நாம் ஏற்கனவே ஒத்துக்கொண்ட படி குறைந்த பட்ச தேசிய பொது செயல் திட்டத்தில் கண்டிப்பாக உறுதியாக இருக்கவேண்டும். இது தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு தேவையில்லாதது என்றுகுறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications