சனிப்பெயர்ச்சி: திருநள்ளாறில் சிறப்பு பூஜை
காரைக்கால்:
சனிப்பெயர்ச்சியையொட்டி திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் சிறப்புப் பூஜைகளும், அபிஷேகங்களும்நடைபெற்றன. லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறில் குழுமி சனி பகவானை வழிபட்டு பரிகாரப் பூஜைகளை செய்தனர்.
மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு சனி பகவான் இன்று அதிகாலை 1.24 மணிக்கு இடம் பெயர்ந்தார். இதையொட்டிதிருநள்ளாறில் உள்ள சனி பகவான் ஆலயத்தில் அதிகாலையில் சிறப்புப் பூஜைகள், பரிகாரப் பூஜைகள், அபிஷேகங்கள்நடத்தப்பட்டன.
ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணி முதல் பூஜைகள் தொடங்கி இன்று அதிகாலையில் பூஜைகள் முடிவடைந்தன. சனி பகவான்சன்னதியில் பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடந்தன. இவற்றை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு வழிபட்டனர்.
கோவிலுக்கு அருகே உள்ள நள தீர்த்தத்திலும் பக்தர்கள் நீராடி வழிபட்டனர். திருநள்ளாறு தவிர தமிழகம் முழுவதிலும் உள்ளசிவாலயங்களில் அமைந்துள்ள சனி பகவான் சன்னதிகளிலும் சிறப்புப் பூஜைகள், பரிகாரப் பூஜைகள் நடத்தப்பட்டன.












Click it and Unblock the Notifications