ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்பை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
தமிழ்நாடு முழுவதும் ஏரி, குளங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் தட்டச்சூரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு ஒன்றைதாக்கல் செய்தார். அதில், எங்கள் ஊரில் உள்ள ஏரியை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது சிலர் அந்த ஏரியைஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு, இன்று தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச்முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
ஏரியை ஆய்வு செய்த தாசில்தார் அறிக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் ஏரியை ஆக்கிரமிப்புசெய்யப்பட்டிருப்பது உண்மை தான் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறுகையில், தட்டச்சூர் ஏரியிலுள்ள ஆக்கிரமிப்பை உடனே அகற்றவேண்டும். மேலும் தமிழ்நாடு முழுவதும் ஏராளமான குளம், குட்டைகள் உள்ளன. பல ஆண்டுகளாக இவை ஆக்கிரமிப்புசெய்யப்பட்டுள்ளன.
இவற்றையும் ஆய்வு நடத்தி ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டனர்.