For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுனாமி: ஆதரவை வாபஸ் பெறுவோம்- சந்திரிகா அரசுக்கு முஸ்லிம் கட்சி மிரட்டல்

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

சுனாமி நிவாரணப்பணிகளில் தங்களை புறக்கணித்ததை கண்டித்து முஸ்லிம் எம்பிக்கள் சந்திரிகா அரக்கு ஆதரவை வாபஸ் பெறப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் சந்திரிகா அரசுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் சுனாமி நிவாரணப் பணிகளில் இணைந்து ஈடுபட விடுதலைப் புலிகளும், இலங்கை அரசும் சமீபத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சநதிரிகா அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ஜேவிபி கட்சி வாபஸ் பெற்றது. இதனால் இலங்கை அரசு மைனாரிட்டி அரசாக நீடித்து வருகிறது.

இந் நிலையில் சந்திரிகா அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறப்போவதாக முஸ்லிம் எம்பிக்கள் அறிவித்துள்ளனர்.

முஸ்லிம் கட்சியைச் சேர்ந்த 2 எம்பிக்கள் சந்திரிகா அரசுக்கு ஆதரவளித்து வருகின்றனர். சுனாமி நிவாரணப் பணிகளுக்கான ஒப்பந்தத்தில் தங்களையும் சேர்க்காதது ஏன் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தங்களது கோரிக்கை 2 நாட்களில் ஏற்கப்பபடாவிட்டால் கூட்டணி அரசிலிருந்து விலகுவோம் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X