For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இயக்குனர் ஆபாசமாக திட்டியதாக நடிகை சீதா புகார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

"காதல் வளர்த்தேன் பட இயக்குனர் கலா புதியவன் தன்னை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதாக அவர் மீது சென்னைகாவல் நிலையத்தில் நடிகை சீதா புகார் கொடுத்துள்ளார்.

இயக்குனர், நடிகர் பார்த்திபனை விட்டுப் பிரிந்து விட்ட சீதா, இப்போது டிவி தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் முழு வீச்சீல்நடித்து வருகிறார். சீதாவுக்கும், டிவி நடிகர் சதீஷ் என்பவருக்கும் இடையே நெருங்கிய நட்பு உள்ளதாக கிசுகிசுக்கப்பட்டுவந்தது (இதன் காரணமாகத்தான் பார்த்திபனும், சீதாவும் பிரிந்தார்கள் என்று முன்பு கூறப்பட்டது).

தற்போது அது உண்மை என்பது தெரியவந்துள்ளது. கலா புதியவன் இயக்கத்தில் உருவாகும் காதல் வளர்த்தேன் படத்தில் சீதாநடித்து வருகிறார். இப்படத்தில் சதீஷுக்கும் ஒரு வாய்ப்பு தர வேண்டும் என்று கலா புதியவனிடம் சீதா கேட்டுள்ளார் போல.

இதுதொடர்பாக கலாபுதியவன் ஏதோ கூற சீதா கோபமடைந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம்நடந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் சீதா ஒரு புகார் கொடுத்துள்ளார்.

அதில், இயக்குனர் கலா புதியவன் என்னைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் மிகவும் அசிங்கமாக, ஆபாசமான வார்த்தைகளால்திட்டினார் என்று கூறியுள்ளார். இதேபோல நடிகர் விஜயகாந்திடமும் சீதா புகார் தெரிவித்துள்ளார்.

கலா புதியவனும் விஜயகாந்தை அணுகியுள்ளார். ஆனால் சீதா காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விட்டதால் காவல்நிலையத்திலேயே வைத்து பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளுங்கள் என்று இரு தரப்பினரிடமும் விஜயகாந்த் கூறி விட்டார்.

அதேபோல காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு சமரசம் செய்து வைக்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து சீதா, கலாபுதியவன் இருவரையும் வரவழைத்த விருகம்பாக்கம் காவல் நிலையத்தினர் திங்கள்கிழமை நள்ளிரவு வரை பேச்சுவார்த்தைநடத்தி சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X