பண்ணை வீட்டில் திருட முயன்ற அதிமுக நிர்வாகி
ஈரோடு:
ஈரோடு அருகே விவசாயப் பண்ணை வீட்டில் கொள்ளை அடிப்பதற்காக பதுங்கியிருந்த அதிமுக நிர்வாகி உள்ளிட்ட நான்குபேரை கிராம மக்கள் வளைத்துப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் கிராமத்தில் பண்ணை வீட்டில் நடராஜன், முத்துலட்சுமி தம்பதியினர் வசித்து வருகிறார்கள்.இன்று அதிகாலை முத்துலட்சுமி வீட்டிற்கு வெளியே வந்தபோது அங்கு நான்கு பேர் பதுங்கியிருந்ததைப் பார்த்து கூச்சல்எழுப்பினார்.
இதையடுத்து கிராம மக்கள் திரண்டனர். முத்துலட்சுமி வீட்டிற்கு அருகே பதுங்கியிருந்த நான்கு பேரையும் வளைத்துப்பிடித்தனர். அவர்களிடம் விசாரித்ததில் அவர்களில் ஒருவரான முத்துச்சாமி என்பவர் எழுமாத்தூர் ஊராட்சி மன்ற உறுப்பினர்மற்றும் அதிமுக நிர்வாகி எனத் தெரியவந்தது.
முத்துலட்சுமியின் வீட்டில் திருடுவதற்காக தாங்கள் பதுங்கியிருந்ததாக நான்கு பேரும் பொதுமக்களிடம் தெரிவித்தனர்.பின்னர் அவர்கள் அரச்சலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.