For Quick Alerts
For Daily Alerts
Just In
சென்னை: பட்டப்பகலில் வீட்டில் புகுந்து 100 பவுன் நகை கொள்ளை
சென்னை:
சென்னையில் பட்டப்பகலில் பூட்டிய வீட்டில் இருந்து 100 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
சென்னை திரு.வி.க. நகரில் வசிப்பவர் மோகன சுந்தரம். இவர் தொலைபேசி இலாகாவில் பணி புரிந்து வருகிறார். மோகனசுந்தரம் வழக்கம் போல நேற்று காலை வேலைக்கு சென்று விட்டார்.
பகலில் இவரது குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுவிட்டு வந்தனர். வந்து பார்த்த போது வீட்டினுள் பீரோஉடைக்கப்பட்டு அதில் இருந்த 100 பவுன் நகை கொள்ளை போனது தெரியவந்தது.
இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Comments
Story first published: Wednesday, June 29, 2005, 5:30 [IST]