அப்துல் கலாம் பயணத்தில் மாற்றம்
நாகப்பட்டினம்:
குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் தமிழக சுற்றுப்பயணத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சுனாமியால் அதிகம் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்திற்கு அப்துல் கலாம் நாளை (வியாழக்கிழமை)சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக இன்று இரவு அவர் திருச்சிக்கு விமானம் மூலம் வருகிறார். இரவு திருச்சியில் தங்கும்கலாம், வியாழக்கிழமை காலை 8.45 மணிக்கு நாகை செல்கிறார்.
அங்கு அவருக்கு நாகை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிவாரணப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்டாக்டர் ராதாகிருஷ்ணன் விளக்குகிறார். அதன் பின்னர் அக்கரைப்பேட்டை, வேளாங்கண்ணி, கீச்சாங்குப்பம் ஆகியபகுதிகளை அப்துல் கலாம் பார்வையிடுகிறார்.
தற்காலிக குடியிருப்புகள் உள்ளிட்டவற்றையும் அவர் பார்வையிடுகிறார். பின்னர் காரைக்கால் செல்லும் கலாம், அங்குஅமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் காப்பகத்தை பார்வையிட்டு குழந்தைகளுடன் அளவளாவுகிறார்.
இதைத் தொடர்ந்து இரவு திருச்சி திரும்பி அங்கிருந்து டெல்லி செல்வதாக முன்பு திட்டமிடப்பட்டிருந்தது. அதில் சிறிய மாற்றம்செய்யப்பட்டுள்ளது. நாகையில் மேலும் சில இடங்களையும் கலாம் பார்க்க விரும்புவதால் அங்கு வியாழக்கிழமை இரவுகலாம் தங்கி விட்டு வெள்ளிக்கிழமை காலை திருச்சி சென்று பின்னர் டெல்லி திரும்புவதாக திட்டம் மாற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications