கடலூர் சிறையில் கைதிகள் தாக்கி வார்டன் காயம்
கடலூர்:
கடலூர் மத்திய சிறையில் கைதிகள் பயங்கர ரகளையில் ஈடுபட்டதில் தலைமை வார்டன் படுகாயமடைந்தார். ஆபத்தானநிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சென்னை, பாலவாக்கத்தைச் சேர்ந்தவர் சுந்தர். இவர் வழிப்பறி கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்டு கடலூர் மத்தியசிறையில் அடைக்கப்பட்டுள்ளார். விசாரணை கைதிகள் பிரிவில் இருக்கும் சுந்தரத்தை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லபோலீஸார் வருவர் என எதிர்பார்த்திருந்தார்.
ஆனால், போலீஸார் சுந்தரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லாமல் காவல் நீட்டிப்பு பெற்றுவிட்டதாக கூறியுள்ளனர்.ஏமாற்றம் அடைந்த சுந்தர், அப்போது பணியில் இருந்த தலைமை வார்டன் ஞானசேகரனிடம் கதவை திறந்துவிடும்படிகேட்டுள்ளார்.
அதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த சுந்தர் மற்றும் அவருக்கு ஆதரவாக மற்ற சில கைதிகளும் ரகளையில்ஈடுபட்டனர். அப்போது வார்டன் ஞானசேகரன் நெற்றியில் சுந்தர் கல்லால் தாக்கினார். இதில் படுகாயமடைந்த ஞானசேகரனைசிறைத்துறை அதிகாரிகள் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு ஞானசேகரன் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.












Click it and Unblock the Notifications