For Quick Alerts
For Daily Alerts
Just In
குஜராத்தில் கனமழைக்கு 70 பேர் பலி
அகமதாபாத்:
குஜராத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழைக்கு இதுவரை 70 பேர் பலியாகி விட்டனர். பல பகுதிகள்வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
ஆறுகளில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடுகிறது. நவசாரி மாவட்டத் தில் உள்ள 50 கிராமங்கள் துண்டிக்கப் பட் டுள்ளன.இம்மாவட்டத்தில் 30,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
ஆனந்த் மாவட்டத்தில் 20,000 பேரும், வதோதரா நகரில் 10,000க்கும் மேற்பட்டோரும் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். கன மழைக்கு இதுவரை 70 பேர் பலியாகியுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ராணுவம்ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
Comments
Story first published: Friday, July 1, 2005, 5:30 [IST]