For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குஜராத்தில் கனமழைக்கு 70 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

அகமதாபாத்:

குஜராத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழைக்கு இதுவரை 70 பேர் பலியாகி விட்டனர். பல பகுதிகள்வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பஞ்சாப், ஹரியானா உட்பட நாட்டின் பல வடமாநிலங்களில் தற்போது பருவமழை தீவிரமடைந்து உள்ளது. குஜராத்தில் கடந்தநான்கு நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. மழையால் மாநிலத்தின் பல பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

ஆறுகளில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடுகிறது. நவசாரி மாவட்டத் தில் உள்ள 50 கிராமங்கள் துண்டிக்கப் பட் டுள்ளன.இம்மாவட்டத்தில் 30,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

ஆனந்த் மாவட்டத்தில் 20,000 பேரும், வதோதரா நகரில் 10,000க்கும் மேற்பட்டோரும் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். கன மழைக்கு இதுவரை 70 பேர் பலியாகியுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ராணுவம்ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X