முதலிரவில் கணவன், மனைவி எரித்துக் கொலை: மாஜி காதலனுக்கு இரட்டை ஆயுள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காதலித்த பெண் வேறு ஒருவரைக் கல்யாணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த வாலிபர், காதலியின் முதலிரவன்றுஅவரையும், அவரது கணவரையும் எரித்துக் கொன்றார். அவருக்கு பூந்தமல்லி நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனைவிதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை புறநகரான பரங்கி மலை பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கவாசகம். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சலோமிஎன்பவருக்கும் காதல் ஏற்பட்டது.

இந்த நிலையில் சலோமிக்கு ஆந்திராவைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சலோமியின் பெற்றோர் கடந்த 1997ம் ஆண்டு ஜூலை7ம் தேதி திருமணம் செய்து கொடுத்து விட்டனர்.

நம்மைக் காதலித்து விட்டு இன்னொரு நபரை சலோமி திருமணம் செய்து கொண்டு விட்டாரே என்று கொதிப்படைந்தார்மாணிக்கவாசகம். இந் நிலையில் சலோமியின் வீட்டில் ஜூலை 10ம் தேதி முதலிரவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இதை அறிந்த மாணிக்கவாசகம், சலோமியின் வீட்டுக்கு பெட்ரோலுடன் சென்றார். சலோமியும், ரமேஷும் தனியாக இருந்தஅறையில் பெட்ரோலை ஊற்றி தீவைத்தார். இதில் இருவரும் படுகாயமடைந்து அடுத்த நாள் இறந்தனர்.

மாணிக்கவாசகம் மீது பூந்தமல்லி விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிஅசோகன், மாணிக்கவாசகத்திற்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 20,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.

அபராதம் கட்டத் தவறினால் மேலும் 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதிஉத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+