நாளை சேது சமுத்திர விழா: இன்று முதல் சிறப்பு ரயில்கள்
சென்னை:
சேது சமுத்திரத் திட்டத் தொடக்க விழாவில் பொதுமக்கள் கலந்து கொள்வதற்காக மதுரைக்கு, சென்னை மற்றும்கோவையிலிருந்து சிறப்பு ரயில்களை விட ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த விழாவில் பொது மக்கள் ஏராளமான அளவில் கலந்து கொள்வதற்காக சென்னை மற்றும் கோவையிலிருந்து சிறப்புரயில்களை இயக்க ரயில்வ இணை அமைச்சர் ஆர்.வேலு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை எழும்பூலிருந்து இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு ஒரு சிறப்பு ரயில் கிளம்புகிறது. இந்த ரயில் மதுரைவழியாக சனிக்கிழமை பிற்பகல் நாகர்கோவிலை அடைகிறது.
இதேபோல மதுரை வரை செல்லும் இன்னொரு ரயில் எழும்பூலிருந்து இரவு 11 மணிக்குக் கிளம்புகிறது. மதுரையை காலை8.45 மணிக்கு சென்றடைகிறது. மறு மார்க்கத்தில் சனிக்கிழமை இரவு 10மணிக்கு மதுரையிலிருந்து கிளம்பி ஞாயிற்றுக்கிழமைகாலை 7 மணிக்கு சென்னை வந்தடையும்.
இதேபோல, கோவையிலிருந்து மதுரை வழியாக தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கோவையில் இன்று இரவு11.30 மணிக்குப் புறப்பட்டு சனிக்கிழமை காலை 10.45 மணிக்கு தூத்துக்குடியை இந்த ரயில் சென்றடைகிறது.
மறு மார்க்கத்தில் தூத்துக்குடியிலிருந்து சனிக்கிழமை இரவு 8.30 மணிக்குப் புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்குகோவை சென்று சேரும்.












Click it and Unblock the Notifications