பெட்ரோல்: தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன் அதிமுக சார்பில்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு சமீபத்தில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலையை உயர்த்தியது. இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகசார்பில் மத்திய அரசு அலுவலகங்கள் முன் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

இதன்படி இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள டெலிபோன் துறை, தபால் துறை மற்றும் வருமானவரித்துறை அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் முன் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னையில் சென்ட்ரல் மெமோரியல் ஹால் அருகிலுள்ள தபால் அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுகஅமைப்புச் செயலாளர் சுலோசனா சம்பத் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சர்கள் முத்துசாமி, அரங்கநாயகம்,

துணை மேயர் கராத்தே தியாகராஜன், பி.கே. சேகர் பாபு எம்எல்ஏ, மாவட்ட செயலாளர்கள் பால கங்கா, ஆதி ராஜாராம்,முன்னாள் எம்எல்ஏ சைதை துரைசாமி, நடிகர் எஸ்.வி. சேகர், நடிகை சி.ஆர். சரஸ்வதி மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+