For Daily Alerts
Just In
சேது: மதுரையில் கருப்புக் கொடி-500 பேர் கைது
மதுரை:
மதுரையில் சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து கருப்புக் கொடி காட்ட முயன்ற பெண்கள் உட்பட 500 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
மதுரையில் இத்திட்டத்தின் தொடக்க விழா, பிரதமர் மன்மோகன் சிங்கின் தலைமையில் இன்று மாலை நடைபெறுகிறது.
இந் நிலையில் மதுரையில் சேது சமுத்திரத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்ட முயன்றவர்கள் கைதுசெய்யப்பட்டனர். மதுரை மேல ாசி வீதி, மற்றும் வடக்கு மாசி வீதி பகுதியில் கருப்புக் கொடி காட்ட முயன்ற பெண்கள் உட்படசுமார் 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Comments
Story first published: Saturday, July 2, 2005, 5:30 [IST]