For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சேது: மதுரையில் கருப்புக் கொடி-500 பேர் கைது

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

மதுரையில் சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து கருப்புக் கொடி காட்ட முயன்ற பெண்கள் உட்பட 500 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

சேது சமுத்திரத் திட்டத்திற்கு தூத்துக்குடி பகுதியை சேர்ந்த சில மீனவ அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சேதுசமுத்திரத் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்தவழக்கு பிறகு தள்ளுபடி செய்யப்பட்டது.

மதுரையில் இத்திட்டத்தின் தொடக்க விழா, பிரதமர் மன்மோகன் சிங்கின் தலைமையில் இன்று மாலை நடைபெறுகிறது.

இந் நிலையில் மதுரையில் சேது சமுத்திரத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்ட முயன்றவர்கள் கைதுசெய்யப்பட்டனர். மதுரை மேல ாசி வீதி, மற்றும் வடக்கு மாசி வீதி பகுதியில் கருப்புக் கொடி காட்ட முயன்ற பெண்கள் உட்படசுமார் 500 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X