3 வழக்குகளிலிருந்து தினகரன் விடுவிப்பு
சென்னை:
அன்னியச் செலாவணி மோசடி தொடர்பான 3 வழக்குகளிலிருந்து அதிமுக எம்.பி. டிடிவி தினகரன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மைக்காம் லெதர் என்ற நிறுவனத்தில் 4.77 லட்சம் டாலர் மதிப்புள்ள பங்குகளை விலைக்கு வாங்கியது, சிங்கப்பூர்பிரஜையாக மாறுவதற்கு 10லட்சம் சிங்கப்பூர் டாலர்களை செலுத்தி அன்னியச் செலாவணி மோசடி செய்தது,
இதுதவிர மேலும் 2 அன்னியச் செலாவணி வழக்குகளும் நிலுவையில் உள்ளன. சென்னை எழும்பூர் பொருளாதாரக் குற்றவியல்நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தன.
இந் நிலையில், மேற்கண்ட 3 வழக்குகளிலிருந்தும் தன்னை விடுவிக்கக் கோரி தினகரன் தரப்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், அமலாக்கப் பிரிவின் நியாயக் கமிட்டி விசாரணையின் போது, 3 வழக்குகளிலும் என் மீதானபுகார்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
இதன் அடிப்படையில் 3 வழக்குகளிலிருந்தும் என்னை விடுவிக்க வேண்டும் என்று தினகரன் கோரியிருந்தார். அமலாக்கப்பிரிவு நியாயக் கமிட்டியின் விசாரணை அடிப்படையில் இந்த வழக்கிலிருந்து தினகரனை விடுவிக்கக் கூடாது என்று எதிர்ப்புதெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆறுமுகம், அமலாக்கப் பிரிவின் நியாயக் கமிட்டி உத்தரவின் அடிப்படையில் 3வழக்குகளிலிருந்தும் தினகரனை விடுவிப்பதாக தீர்ப்பளித்தார்.