சென்னை-மதுரை விமானத்தில் கோளாறு: தவித்த மத்திய அமைச்சர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சேது சமுத்திரத் திட்ட தொடக்க விழாவுக்காக சென்னையிலிருந்து மத்திய அமைச்சர்கள் புறப்பட்ட விமானத்தில் திடீர் கோளாறுஏற்பட்டது. இதனால் சுமார் மூன்றரை மணி நேரம் தாமதாக விமானம் புறப்பட்டு சென்றது.

சேது சமுத்திரத் திட்ட தொடக்க விழா மதுரையில் இன்று மாலை நடக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக மத்தியஅமைச்சர்கள் தயாநிதி மாறன், இளங்கோவன், முனியப்பா, மு.க. ஸ்டாலின் ஆகியோர் இன்று காலை சென்னை விமான நிலையம்வந்தனர்.

காலை 6.40 மணியளவில் இவர்கள் புறப்பட வேண்டிய ஜெட் ஏர்வேஸ் விமானம் புறப்படத் தயாராக இருந்தது. விமானத்தில்மொத்தம் 108 பயணிகள் இருந்தனர். ஆனால் திடீரென விமானத்தில் எந்திரக் கோளாறு ஏற்பட்டதால் புறப்படத் தாமதமானது.

இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் உட்பட பயணிகள் அனைவரும் விமானத்தை விட்டு இறங்குமாறுஅறிவுறுத்தப்பட்டனர். இதனால் அனைவரும் இறங்கினர்.

பிறகு விமானத்தில் கோளாறு சரி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து காலை 10.15 மணியளவில் சுமார் மூன்றரை மணி நேரம்தாமதமாக மதுரை புறப்பட்டு சென்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+