சென்னை-மதுரை விமானத்தில் கோளாறு: தவித்த மத்திய அமைச்சர்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சேது சமுத்திரத் திட்ட தொடக்க விழாவுக்காக சென்னையிலிருந்து மத்திய அமைச்சர்கள் புறப்பட்ட விமானத்தில் திடீர் கோளாறுஏற்பட்டது. இதனால் சுமார் மூன்றரை மணி நேரம் தாமதாக விமானம் புறப்பட்டு சென்றது.
சேது சமுத்திரத் திட்ட தொடக்க விழா மதுரையில் இன்று மாலை நடக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக மத்தியஅமைச்சர்கள் தயாநிதி மாறன், இளங்கோவன், முனியப்பா, மு.க. ஸ்டாலின் ஆகியோர் இன்று காலை சென்னை விமான நிலையம்வந்தனர்.
இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் உட்பட பயணிகள் அனைவரும் விமானத்தை விட்டு இறங்குமாறுஅறிவுறுத்தப்பட்டனர். இதனால் அனைவரும் இறங்கினர்.
பிறகு விமானத்தில் கோளாறு சரி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து காலை 10.15 மணியளவில் சுமார் மூன்றரை மணி நேரம்தாமதமாக மதுரை புறப்பட்டு சென்றது.












Click it and Unblock the Notifications