வெள்ளத்தில் மூழ்கும் குஜராத்: 150 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்:

குஜராத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டிவிட்டது. இந்த மாநிலத்தின்70 சதவீத பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கின்றன.

குஜாராத் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக அடை மழை பெய்து வருகிறது. இதனால் இந்த மாநிலத்தில் 70 சதவீத பகுதிகளும்வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மக்களின் இயல்பு வாழக்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பரோடா, ஆனந்த், கேடா ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வதோரா, சூரத் ஆகிய நகரங்கள்வெள்ளத்தில் நிலைகுலைந்து போயுள்ளன. இந்த இரு நகரங்களிலும் சாலைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால்போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

வதோரா, சூரத் ஆகிய நகரங்களில் மீட்புப் பணிகளில் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மழையால் பாதிக்கப்பட்டபகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆகியோர் இன்று விமானத்தில்சென்று ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 100க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். சுமார் 2 லட்சத்திற்கும்மேற்பட்டோர் வீடுகளை இழந்து விட்டனர். இவர்கள் அனைவரும் பத்திரமான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குஜராத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதத்திற்காக மத்திய அரசு முதல் கட்டமாக ரூ. 500 கோடி ஒதுக்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+